இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 4பேருக்கு நவம்பர் 3ம் தேதி வரை காவல்.. மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைதான பாம்பன் மீனவர்கள் 4 பேரை, நவம்பர் 3ம் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, மீனவர்களை கைது செய்தது மட்டுமல்லாது, அவர்கள் பயன்படுத்திய படகையும் சிறைப்பிடித்து சென்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் நவம்பர் 3ம் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *