இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2 க்கு 1 என்று வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. மொகாலியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இந்த இரட்டை சதத்தால் ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்திலும், ஏபி டி வில்லியர்ஸ் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், பாபர் ஆசம் 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.
2017-12-19