அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தின் அருகில் உள்ள துணைமின் நிலையம் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளியூருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் இருளில் சிக்கித் தவித்தனர். மற்றொரு துணைமின் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக விமான நிலையத்துக்கு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டதையடுத்து மீண்டும் விமானங்கள் இயங்கத் தொடங்கியது.
2017-12-19