தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இந்த வருடம் ஓரளவுக்கு பெய்துள்ளது. இன்னும் மழை காலம் முடியாத நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இரவிலும், அதிகாலையிலும் பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில் கிழக்கில் இருந்து கடற்காற்று நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017-12-19