இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. இதனால், தற்போது முதலமைச்சராக உள்ள வீரபத்ரசிங் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. பிரேம்குமார் துமல் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி, இமாச்சலபிரதேசத்தில் தலைவர்கள் முகாமிட்டு, தீவிர பிரசாரம் செய்தனர். பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று மாலை அங்கு தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது. இதனால், அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தலையொட்டி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.