மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 37 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் காலை வர்த்தகத்தின்போது புதிய உச்சம் தொட்டது. வர்த்தக-தொழில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும், அதன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகளிலும் இன்றைய காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் காணப்பட்டது. இன்றைய காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 37 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு கீழிறங்கியது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 11 ஆயிரத்து 172 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.