இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளுக்கு பேட்டியளித்த அஜிங்கியா ரஹானே அண்மையில் நடந்த போட்டிகளில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில், அவர் ஓய்வு பெறுவது பற்றியே பலர் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். அனுபவ வீரரான தோனி, பல அறிவுரைகளை மைதானத்தின் வழங்குவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்த ரஹானே, அவரது அறிவுரைகள் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *