குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவில் பனி மழை கொட்டுகிறது. இதனால் அங்கு கடுமையான குளிர்காற்று வீசுகிறது. பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பெய்து வருகிறது. சாலைகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடப்பதால், வீட்டின் முன்பும், அங்கு நிறுத்தி வைத்திருக்கும் கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளின் கதவுகளை திறந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றுவதில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
2017-12-30