அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவில் பனி மழை கொட்டுகிறது. இதனால் அங்கு கடுமையான குளிர்காற்று வீசுகிறது. பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பெய்து வருகிறது. சாலைகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடப்பதால், வீட்டின் முன்பும், அங்கு நிறுத்தி வைத்திருக்கும் கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளின் கதவுகளை திறந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றுவதில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *