தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 399 மிமீ மழை பெய்துள்ளது. இது, முந்தைய ஆண்டுகளில் பெய்த இயல்பான மழை அளவை விட 9 சதவீதம் குறைவு. அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை வலுப்பெறாமல், வலுவிழந்து வருகின்றன. இன்னும் சில தினங்கள் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *