இந்தியா பலமிழந்த நாடு இல்லை என்பதை சீனா உணர்ந்து கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தற்போது பலவீனமான நாடு அல்ல என்பதை சீனாவும் உணர்ந்துள்ளது என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா திறன்மிக்க நாடுகளில் ஒன்றாக முன்னேறி வருவதாகவும், உலகரங்கில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், பேசிய ராஜ்நாத் சிங், இந்திய எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலை நிகழ்த்தி வருவதாகவும், ஆனால், ஒவ்வொரு நாளும் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில், 2 அல்லது 3 தீவிரவாதிகளை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார்.