மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆர்.கே.நகரில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா என்று கேள்விஎழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகளுடன்
இது குறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உங்களுக்கு ஒதுக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வின் எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,எம்,ஜி,ஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும்
என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, கடந்த முறை போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் தான் மீண்டும் போட்டியுடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.