நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீடிரென ஆய்வு செய்தார். அங்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுவர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது என்று கூறினார். மேலும் பொது மக்கள் காய்ச்சல் என்று தெரிந்த உடனே அரசு மருத்துவமனையை அனுக வேண்டும் என்றும் நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *