ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதியின்றி நடத்தபட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

பலசோர் மாவட்டம் குன்டச்சக்கா கிராமத்தில் கோலக் பிரதான் என்பவர் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்ததாகவும் அங்கு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பாபல்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பூரி மாவட்டற்குட்பட்ட பிப்லி பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி ஒருவரும் ரூர்கேலா நகர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *