ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நிறுத்த சிலர் சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க மத்திய அரசிற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நிறுத்த சிலர் சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார்.
முன்னதாக சென்னையில் பல்கலை கழகத்தில் நடைபெற்ற இந்திய அரசியல் கூட்டமைப்பின் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆவர், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் மாநில சுயாட்சி கேள்விகுறியாகி இருப்பதாகவும், கூட்டாட்சி முறை பின்பற்றபடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், திமுகவின் திருச்சி சிவா, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாடு முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.