ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிருஷ்ணா ஆற்றின் பவானி தீவில் இருந்து, பவித்ரா சங்கமம் பகுதிக்கு, 38 சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற மீட்பு படை வீரர்களும், உள்ளூர் மீனவர்களும் 20 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, மீட்கப்பட்டவர்களில் சிலர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இதனிடையே, மாயமான 7 பேரை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.