அம்பேத்கர் காட்டிய பாதையில் தமது அரசு நடைபெறுகிறது: பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமது அரசு எப்போதும் ஏழைகளுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், அம்பேத்கர் காட்டிய பாதையில் நடப்பதாகவும் தெரிவித்தார். தலித் மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி செய்ததைவிட பாஜக அரசு நிறையவே நன்மைகள் செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலிமையற்றதாக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் 10நாட்களுக்குப் பின்னர் விசாரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்துப் பிரதமர் பங்கேற்ற முதல் விழாவிலேயே இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *