அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்… முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை;

அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கச்சேரிமேட்டில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டினார். மேலும் அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். பாஜகவின் ஊக்கத்தால் ரஜினி கட்சி தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *