அவதூறு வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு;

பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க பிப்ரவரி 5ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தன் மீது அவதூறு பரப்பியதாக பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் போத்ரா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க, பிப்ரவரி 5ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிரான போத்ராவின் மேல் முறையீட்டு மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த போது ரஜினிகாந்த் பதிலளிக்க பிப்ரவரி 5 வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *