வடகிழக்கு பருவகாற்று வலுப்பெற தொடங்கி உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-10-26