இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, களமிறயங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு அந்த அணியினர் 230 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 7 ரன்களில் பெவிலியன் திரும்பி, அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் 44 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இந்திய அணி இலக்கை எட்டியது.