அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினகளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *