மெல்போர்னில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியாவின் பென் மெக் டெர்மாட் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து நின்று விளையாடினார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 19ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 19ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7விக்கெட் இழப்புக்கு 132ரன்கள் எடுத்தது.
ஆட்டமிழக்காமல் பென் மெக் டெர்மாட் 32ரன்களும் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை 12ரன்களும் எடுத்திருந்தனர். விட்டுவிட்டு மழை பெய்ததால் இந்திய அணியின் பேட்டிங் தொடங்கத் தாமதமானது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 3போட்டிகள் கொண்ட தொடரில் முதல்போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.