லண்டனில், வசிக்கும் வீட்டில் இருந்து மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுபிஎஸ் ஏஜி என்ற சுவிஸ் வங்கியில் லண்டன் வீட்டை அடமானம் வைத்து, 5 ஆண்டு காலத்தில் திருப்பிச் செலுத்துமாறு சுமார் 185 கோடி ரூபாயை மல்லையா 2012ஆம் ஆண்டில் கடனாகப் பெற்றுள்ளார். மல்லையா குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமான நிறுவனம் பங்குகளை வாங்கிய ரோஸ் கேப்பிடல் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரால் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது.
5 ஆண்டு காலம் முடிவடைந்த பின்னரும் மல்லையா கடனை திருப்பிச் செலுத்தாததால், லண்டன் வீட்டில் இருந்து மல்லையா குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, சுவிஸ் வங்கியான யுபிஎஸ் ஏஜி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளது. வழக்கின் தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராக அமைவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.