அமெரிக்காவிலிருந்து கூடுதல் எண்ணெய், எரிவாயு இறக்குமதி – சிங்கப்பூர் மாநாட்டுக்கிடையே இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவுடனான வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டிடம் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவில் இருந்து 400 கோடி டாலர் அளவுக்கு எண்ணெய் இருக்குமதி செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விலக்கு அளித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து கூடுதல் இறக்குமதிக்கு தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *