ரோஹிங்கியா இஸ்லாமியர்களை, மியான்மர் ராணுவம் கருணையின்றி கையாள்வதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மைக் பென்ஸ், மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மியான்மர் ராணுவத்தின் மோசமான மற்றும் கருணையற்ற துன்புறுத்தல்களால், 7 லட்சம் ரோகிங்கியா இஸ்லாமியர்களை வங்கதேசத்திற்கு விரட்டியடித்துள்ளதாக ஆங் சாங் சூகியிடம், மைக் பென்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் 2 பேர் மியான்மர் சிறையில் அடைத்திருப்பது, பல லட்சம் அமெரிக்கர்களை வேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூறிய மைக் பென்ஸ், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சூகியிடம் வலியுறுத்தியுள்ளார்.