கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச்சாலையிலுள்ள காவேரி பாலத்தின் ஒரு பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தை தடை செய்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச்சாலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் ஓரம் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக பாலத்தின் வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் பாலத்தை பார்வையிட்ட அதிகாரிகள், உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்றனர்.