இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 11 பேர் பலி.

இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவை நிலநடுக்கம் சுனாமி வரிசையில் கனமழை வெள்ளமும் தாக்கியுள்ளது. வடக்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 வீடுகள் இடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்தவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முவாரா சலாடி  என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு 29 மாணவர்கள் இருந்த ஒரு வகுப்பறையை வெள்ளம் சூழ்ந்து அடித்துச் சென்றதில் 11 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் காணாமல் போன ஒரு மாணவனை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *