பாகிஸ்தான் தங்கள் அன்புக்குரிய நாடு என சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.
முதல் அரசுப் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்ற முகமது பின் சல்மானுக்கு, தனது இல்லத்தில் அந்நாட்டு இம்ரான் கான் விருந்தளித்தார். இதைத் தொடர்ந்து இருநாடுகள் இடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய முகமது பின் சல்மான், எதிர்காலத்தில் மிக மிக முக்கியமான நாடாக பாகிஸ்தான் மாறும் என்று நம்புவதாக தெரிவித்தார். அந்த வளர்ச்சியில் தாங்களும் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவதாக முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி மக்களுக்கு பாகிஸ்தான் அன்புக்குரிய நாடு என்று குறிப்பிட்ட அவர், நல்ல மற்றும் கடினமான காலங்களில் பாகிஸ்தானுடன் இணைந்திருக்க போவதாகவும் கூறியுள்ளார்.