தோழர் முகிலன் காணவில்லை என்பதை ஏதோ ஒரு கண்கட்டி வித்தை என நினைத்து படித்து முடித்து கடந்து செல்லக்கூடிய சாதாரண செயலாக பார்க்க முடியாது ..
சுற்று சூழல் போராளியாக தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்காக போராடி வருபவர் தோழர் முகிலன் அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என ஏதோ குழந்தைகள் காணவில்லை என்பது போல தமிழக அரசு கூறுவது ஏற்புடையதல்ல …
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக ஆதரவாக ஆதாரங்களை சிபிஐ இடம் ஒப்படைக்க இருந்த நேரத்தில் தோழர் முகிலன் கடத்தப்பட்டார் என்பதே மக்கள் போராளியை காயப்படுத்தும் செயல் இந்த செயலை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழக அரசே உடனே காணாமல் போன தோழர் முகிலனை நீதிமன்றத்தில் ஒப்படைய வேண்டும் என இந்திய தேசிய
லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்