உலகில் மிக விலை உயர்ந்த மீன் என்ற பெருமையை ஜப்பானின் கோய் வகை மீன் பெற்றுள்ளது. ஹிரோஷிமா நகரில் உள்ள மீன் பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த கோய் கிராப் வகை மீன் ஒன்று எஸ் லெஜன்ட் என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்தது. சுமார் 3 அடி நீளமுள்ள இந்த மீன் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் பங்கேற்ற தைவான் நாட்டைச் சேர்ந்த யிங்யிங் என்ற பெண், இந்திய மதிப்பில் 13 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு எஸ் லெஜன்ட் மீனை ஏலத்தில் எடுத்தார். இதே வகை மீன் 9 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.