ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் செல்லும் பயணிகள் தூங்கும் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் செல்லும் பயணிகள், தூங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாறப்பட்டுள்ளது. இதுவரை, இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை தூங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு, இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் இந்த உத்தரவு பொருந்தும் என ரயில்வே துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.