இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு, மத்திய பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு என்ற ரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களையும், சிறு தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்து இருக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபுறமிருக்க, சமையல் வாயு விலை ஏற்றத்தின் மூலம் தாய்மார்களும் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மக்களை மிக மோசமாக பாதிக்கும் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை தடுக்கவும் உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு மாற்றவேண்டும்’ என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2017-09-18