பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தையின் இதயத்தில் ஓட்டை, சிறப்பு சிகிச்சைக்காக அதிவேகத்தில் திருச்சியில் இருந்து சென்னை பயணம்

இதயத்தில் ஓட்டையுடன், பிறந்து ஒரு நாளே ஆன  குழந்தை சிறப்பு சிகிச்சைக்காக அதிவேகத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் பகுதியை குணசீலன் மனைவி கிருஷ்ணவேணிக்கு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வந்ததால் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறப்பு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

சிறப்பு ஆம்புலன்சில் 5 மணி நேர பயணத்திற்குள் குழந்தையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து குழந்தைகளுக்கான சிறப்பு வசதி கொண்ட ஆம்புலன்ஸ்சில் சென்னைக்கு அந்த குழந்தை பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *