தமிழ் ஒரு இனிய மொழி, ஆனால் தாம் இன்னும் முழுமையாக கற்கவில்லை என ஆளுநர் பேச்சு

தமிழ் ஒரு இனிய மொழி என்றும், ஆனால் அதை தாம் இன்னும் முழுமையாக கற்கவில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துக் கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் புரோஹித், தமிழ் ஒரு இனிய மொழி என்றும், அதை தாம் இன்னும் முழுமையாகக் கற்கவில்லை எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *