சட்டப்பேரவை முன்பு மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடியே வந்தனர்.

சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே வந்த அவர்கள், ராஜாஜி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பாஜகவிற்கு தமிழக அரசு துணை போவதாக குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *