ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாசாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்கவும், ரத யாத்திரைக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டவாறு அவர்கள் வாகனங்களை மறித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அண்ணசாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.