இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
335 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. 106 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.