சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வங்க கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், அண்ணாசாலை, அசோக் நகர், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், கோயம்பேடு, பாடி, அம்பத்தூர், ஆவடி உள்ளிடட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்ததால் சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *