இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, 181 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்து, ஃபாலோஆன் ஆனது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 649ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் பிருத்திவி ஷா 134 ரன்களும், விராட் கோலி 139ரன்களும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா நூறு ரன்களும் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை நேற்று தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டு இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவை விட 555 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. மீதமிருந்த விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 181 ரன்களுக்கு சுருண்டது
முதலாம் இன்னிங்சில் 468 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து வருகிறது.