கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பெரும்பாலோனோர் கரைதிரும்பியுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 19 விசைபடகுகள் உள்ளிட்ட 80 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளதாக கூறினார்.

மேலும் கரை திரும்பாத மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் 2 டார்னியர் விமானங்கள், மற்றும் 2 கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *