பொங்கல் பரிசாக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய கணக்கில் குளறுபடி என குற்றம்சாட்டி சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வெளிநடப்புச் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர் பொன்முடி 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்க ஆயிரத்து 985 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் 2018 – 19-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 19 கோடியே 11 லட்சம் ரூபாய் என கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.
எப்படிப் பார்த்தாலும் 25 முதல் 30 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.