ஆப்பிரிக்க நாடுகளில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டினால் அங்குள்ள பெங்குவின்கள் மீண்டும் தழைத்தோங்கி வருகின்றன. உலகில் வெப்பமண்டல பெங்குவின்கள் ஆப்பிரிக்கா போன்ற சில இடங்களில் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 2015ம் ஆண்டு 20 ஆயிரமாக இருந்த பெங்குவின்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16 ஆயிரமாகச் சரிந்தது. இதையடுத்து நடந்த ஆய்வில் போதிய மீன்கள் கிடைக்காததால் பெங்குவின்கள் அழிவை நோக்கிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து நமீபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குறிப்பிட்ட எல்லை வரை மீன்பிடிக்க மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்தன. இதன் பலனாக பெங்குவின்கள் எண்ணிக்கை பெருகி வருவது தெரியவந்துள்ளது.