தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகள் தருகின்ற சில்லறை காசுகளை வாங்க, நாம் என்ன சில்லறை கூட்டமா?: கமல்ஹாசன்

அரசியல்வாதிகள் மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு, தேர்தல் காலத்தில், சொற்ப அளவில் தருகின்ற சில்லரை காசுகளை வாங்க நாம் என்ன சில்லறை கூட்டமா என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நீதி பயணக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்றும், அந்த மாற்றம் என்பது, தங்களை நோக்கி நடைபயில்வதற்கு, தங்களை யாரும் விலைக்கு வாங்க அனுமதிக்கக்கூடாது என்றார். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கொடுக்கும் பணம், உங்கள் சொத்து என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *