சென்னை அம்பத்தூர் கொரட்டூர் ஏரி பகுதியில் வசித்த மக்களுக்கு செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல நபர்களுக்கு டோக்கன்கள் சரிவர வழங்கப்பட வில்லை என வீடுகளை இழந்த மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.