டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால், மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது அண்மையில் அதிகரித்ததால் டெல்லியில் மீண்டும் காற்று மாசு மோசம் அடைந்துள்ளது.இதைக் கட்டுப்படுத்துவதற்காக அவசர திட்டத்தை டெல்லி அரசு இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இதன்படி டீசல் ஜெனரேட்டர், கற்கள் அறைப்பான் எந்திரங்கள், தார் சாலை போடுவதற்கான கலவை தயாரிப்பு எந்திரம், ஆகியவற்றை இயக்க டெல்லியில் தடை விதிக்கப்படுகிறது. கார்களுக்கான ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் முறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமானால் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.