உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவிற்கு இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் இருந்து அணி கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்றும், காற்றில் அணு கதிர் வீச்சு கலப்பதாகவும் ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது.
2017-11-03