டெல்லி ஃபெரொஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்திய காமிரா பதிவுகள் வெளியாகின. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் போட்டி நடைபெறும்போது மைதானத்தில் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான ஐ.சி.சி. விதிகளை மீறிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் செல்ஃபோன்களை பயன்படுத்தத் தான் தடை உள்ளதாகவும், அவர்கள் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள வாக்கி டாக்கிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், வாக்கி டாக்கி பயன்படுத்த கோலி உரிய அனுமதி பெற்றுள்ளதாகக் கூறினர்.