புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியளார்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகக் கூறினார். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி 2 தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், அடுத்த 2 நாட்களில், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கவனமுடன் கடலுக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *