குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றாக நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

குரூப்4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தனித்தனியாக நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் 15 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்4-க்கும் விண்ணப்பிக்கின்றனர். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *