முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் தங்களுக்கு ஆதரவாக இன்னும் 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதி நீக்கத்துக்கு எதிராக 18 பேரும் இன்று நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் அங்கே நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். பொறுமையும், நிதானமுன் தோற்றதாக சரித்திரம் இல்லை என்றும் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார். மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோதிலும், முதலமைச்சர் அணியில் தங்களுக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் கூறினார்.